ETV Bharat / entertainment

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கேப்டனான தர்ஷிகா... சவுந்தர்யா ஓரங்கட்டப்படுவதாக 'சவுண்ட்' ரசிகர்கள் வருத்தம்!

Bigg Boss 8 Tamil: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தர்ஷிகா மீண்டும் கேப்டன் ஆன நிலையில், சவுந்தர்யா மற்றும் பெண்கள் அணியினரிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் தர்ஷிகா, சவுந்தர்யா
பிக்பாஸ் தர்ஷிகா, சவுந்தர்யா (Credits - @vijaytelevision X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டன் யார் என்ற கேள்வியுடன் தொடங்கியது. Blind fold taskஇல் தர்ஷிகா வந்த வேகத்தில் ஆண்கள் அணியைனரை அவுட்டாக்கினார். ரஞ்சித் டாஸ்க் என்ற பெயரில் வீட்டை சுத்தம் செய்தது தான் மிச்சம். இதனைத்தொடர்ந்து இந்த சீசனில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அணி மாறுதல் ஒட்டெடுப்பு பெண்கள் அணியில் நடைபெற்றது. அப்போது சவுந்தர்யா விருப்பம் தெரிவிக்க, பெண்கள் அணியில் அனைவரும் கேள்விகளை அம்பு போல விட்டனர். அதே நேரத்தில் சவுந்தர்யா வீடு மாற வேண்டும் என கூறிய காரணங்களில் தெளிவு இல்லை. தனது மனதில் நினைத்துள்ளதை சவுந்தர்யா தெளிவாக பேச தவறுகிறார் என தோன்றுகிறது.

இதனைத்தொடர்ந்து சாச்சனா, தான் ஆண்கள் அணியில் சரியான உளவாளியாக இருப்பேன் என கூறினார். இதனையடுத்து பெண்கள் அணியில் ஒரு மனதாக சாச்சனாவை தேர்வு செய்து ஆண்கள் அணிக்கு அனுப்ப, பெண்கள் அணிக்கு ஜெஃப்ரி இடம் மாறினார். பின்னர் மிகவும் முக்கியமான நாமினேஷன் பஞ்சாயத்து தொடங்கியது. இதில் நேரடி நாமினேஷன் மூலம் அருண், தர்ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே ஆண்கள் அணியினர் முன்பு பிக்பாஸ் தொடங்கிய போது பெண்கள் அணியிடம் ஆண்கள் அணியினரை ஒரு வாரத்திற்கு நாமினேட் செய்யக் கூடாது என்ற கண்டிஷனை பயன்படுத்த முயன்றனர். இதற்கு பிக்பாஸ் இந்த வாரம் நாமினேஷனில் ஆண்கள், பெண்கள் என அணி வித்தியாசம் இல்லை என முட்டுக்கட்டை போட்டார். பின்னர் ரகசிய நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், சத்யா, பவித்ரா, முத்துக்குமரன், சவுந்தர்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் சவுந்தர்யா அதிகபட்சமாக 6 ஓட்டுகள் பெற்றார்.

பிக்பாஸ் வீட்டில் சவுந்தர்யாவின் செயல்பாடுகள் சற்று குறைவாக இருந்தாலும், பெண்கள் அணியினர் அவரை கொஞ்சம் மட்டம் தட்டுவது போலவும், பாரபட்சம் காட்டுவது போன்ற பிம்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் சவுந்தர்யா பெண்கள் அணியை விட ஆண்கள் அணியினருடன் மிகவும் நன்றாக பேசி பழகி வருகிறார்.

இதையும் படிங்க: கங்குவா படத்தின் 2nd சிங்கிள் Yolo பாடல் வெளியானது!

பின்னர் ஷாப்பிங் டாஸ்கில் ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். இது போன்ற டாஸ்கில் பெண்கள் அணியில் சுனிதாவின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் படி இல்லை, ஆனால் அதை பெண்கள் அணியில் எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என சவுந்தர்யா ரஞ்சித்திடம் குற்றச்சாட்டு வைத்தார். ஆக மொத்தம் இந்த வாரம் பெண்கள் அணியில் பெரிய சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரமாவது சவுந்தர்யாவின் ஆட்டம் சூடு பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டன் யார் என்ற கேள்வியுடன் தொடங்கியது. Blind fold taskஇல் தர்ஷிகா வந்த வேகத்தில் ஆண்கள் அணியைனரை அவுட்டாக்கினார். ரஞ்சித் டாஸ்க் என்ற பெயரில் வீட்டை சுத்தம் செய்தது தான் மிச்சம். இதனைத்தொடர்ந்து இந்த சீசனில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அணி மாறுதல் ஒட்டெடுப்பு பெண்கள் அணியில் நடைபெற்றது. அப்போது சவுந்தர்யா விருப்பம் தெரிவிக்க, பெண்கள் அணியில் அனைவரும் கேள்விகளை அம்பு போல விட்டனர். அதே நேரத்தில் சவுந்தர்யா வீடு மாற வேண்டும் என கூறிய காரணங்களில் தெளிவு இல்லை. தனது மனதில் நினைத்துள்ளதை சவுந்தர்யா தெளிவாக பேச தவறுகிறார் என தோன்றுகிறது.

இதனைத்தொடர்ந்து சாச்சனா, தான் ஆண்கள் அணியில் சரியான உளவாளியாக இருப்பேன் என கூறினார். இதனையடுத்து பெண்கள் அணியில் ஒரு மனதாக சாச்சனாவை தேர்வு செய்து ஆண்கள் அணிக்கு அனுப்ப, பெண்கள் அணிக்கு ஜெஃப்ரி இடம் மாறினார். பின்னர் மிகவும் முக்கியமான நாமினேஷன் பஞ்சாயத்து தொடங்கியது. இதில் நேரடி நாமினேஷன் மூலம் அருண், தர்ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே ஆண்கள் அணியினர் முன்பு பிக்பாஸ் தொடங்கிய போது பெண்கள் அணியிடம் ஆண்கள் அணியினரை ஒரு வாரத்திற்கு நாமினேட் செய்யக் கூடாது என்ற கண்டிஷனை பயன்படுத்த முயன்றனர். இதற்கு பிக்பாஸ் இந்த வாரம் நாமினேஷனில் ஆண்கள், பெண்கள் என அணி வித்தியாசம் இல்லை என முட்டுக்கட்டை போட்டார். பின்னர் ரகசிய நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், சத்யா, பவித்ரா, முத்துக்குமரன், சவுந்தர்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் சவுந்தர்யா அதிகபட்சமாக 6 ஓட்டுகள் பெற்றார்.

பிக்பாஸ் வீட்டில் சவுந்தர்யாவின் செயல்பாடுகள் சற்று குறைவாக இருந்தாலும், பெண்கள் அணியினர் அவரை கொஞ்சம் மட்டம் தட்டுவது போலவும், பாரபட்சம் காட்டுவது போன்ற பிம்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் சவுந்தர்யா பெண்கள் அணியை விட ஆண்கள் அணியினருடன் மிகவும் நன்றாக பேசி பழகி வருகிறார்.

இதையும் படிங்க: கங்குவா படத்தின் 2nd சிங்கிள் Yolo பாடல் வெளியானது!

பின்னர் ஷாப்பிங் டாஸ்கில் ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். இது போன்ற டாஸ்கில் பெண்கள் அணியில் சுனிதாவின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் படி இல்லை, ஆனால் அதை பெண்கள் அணியில் எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என சவுந்தர்யா ரஞ்சித்திடம் குற்றச்சாட்டு வைத்தார். ஆக மொத்தம் இந்த வாரம் பெண்கள் அணியில் பெரிய சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரமாவது சவுந்தர்யாவின் ஆட்டம் சூடு பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.