ETV Bharat / entertainment

'வேட்டையன்' படத்திற்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு! - vettaiyan movie case

author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

vettaiyan movie case: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள 'வேட்டையன்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு
வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு (Credits - @LycaProductions, ETV Bharat Tamil Nadu)

மதுரை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை முன்னிட்டு வெளியாகிறது.

வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மனசிலாயோ, hunter varaar ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டீசர் மற்றும் நேற்று (அக்.2) வெளியான டிரெய்லர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் திரைப்படம் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மிரட்டும் சூப்பர் ஸ்டார்... 'வேட்டையன்' டிரெய்லர் வெளியானது! - vettaiyan trailer

இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பழனிவேலு தொடர்ந்த வழக்கில், “வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மதுரை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை முன்னிட்டு வெளியாகிறது.

வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மனசிலாயோ, hunter varaar ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டீசர் மற்றும் நேற்று (அக்.2) வெளியான டிரெய்லர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் திரைப்படம் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மிரட்டும் சூப்பர் ஸ்டார்... 'வேட்டையன்' டிரெய்லர் வெளியானது! - vettaiyan trailer

இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பழனிவேலு தொடர்ந்த வழக்கில், “வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.