ETV Bharat / entertainment

ஜெயிலர் 2 எப்போது? - வசந்த் ரவி கூறிய முக்கிய அப்டேட்! - Vasanth Ravi about Jailer 2

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 4:50 PM IST

Actor Vasanth Ravi about jailer 2: “ஜெயிலர் பார்ட் 2-க்கான லீட் இருக்கிறது என பார்ட் 1-இன் கிளைமேக்ஸ் படப்பிடிப்பின்போதே நான் நெல்சன் சாரிடம் சொன்னேன், ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அவர் அப்போது சொன்னார்” என நடிகர் வசந்த் ரவி கூறியுள்ளார்.

நடிகர் வசந்த் ரவி
‘ஜெயிலர் 2’ பற்றி கேட்டபோது நெல்சன் சார் இப்படித்தான் சொன்னார்

சென்னை: வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த் ரவி. இவர் ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் சேர்ந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தார். தீவிரமான கதைக்களங்களில் நடித்து வந்த அவர், அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படமாக “பொன் ஒன்று கண்டேன்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை (ஏப்ரல் 18) தன் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள வசந்த் ரவி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறது.

நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட் படங்கள். ஆனால், ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன், ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்னர், அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் தேர்ந்து நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன், இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. ‘ஜெயிலர்2’ வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை, எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது.

‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் ,“பார்ட் 2 க்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அவர் அப்போது சொன்னார். அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வித்தியாசமான படங்களில் நடித்து மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்' - Uppu Puli Karam Web Series

சென்னை: வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த் ரவி. இவர் ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் சேர்ந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தார். தீவிரமான கதைக்களங்களில் நடித்து வந்த அவர், அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படமாக “பொன் ஒன்று கண்டேன்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை (ஏப்ரல் 18) தன் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள வசந்த் ரவி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறது.

நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட் படங்கள். ஆனால், ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன், ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்னர், அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் தேர்ந்து நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம்.

அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன், இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. ‘ஜெயிலர்2’ வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை, எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது.

‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் ,“பார்ட் 2 க்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அவர் அப்போது சொன்னார். அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வித்தியாசமான படங்களில் நடித்து மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்' - Uppu Puli Karam Web Series

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.