ETV Bharat / entertainment

"இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு"... சூர்யாவிடம் அஜீத் கூறியது என்ன?

Ajith about Director siva: கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் இயக்குநர் சிவாவுடன் பணியாற்றியது குறித்து அஜீத் கூறியதை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா, அஜித்குமார் புகைப்படம்
நடிகர் சூர்யா, அஜித்குமார் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, shaliniajithkumar2022 Instagram account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

சென்னை: இயக்குநர் சிவா குறித்து நடிகர் அஜித்குமார் கூறியதை கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டார். இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் கங்குவா. சூர்யா திரை வாழ்வில் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கங்குவா திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், உலகம் முழுவதும் ஓடிடியில் 38 மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே கங்குவா படத்தின் இரண்டு பாடல்கள் Fire song, Yolo ஆகியவை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கங்குவா திரைப்பட குழு தற்போது இந்தியா முழுவதும் தீவிர ப்ரமோஷனில் இறங்கியுள்ளது.

கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பேசுகையில், “இது தமிழில் உருவாகியுள்ள பாகுபலி போன்ற திரைப்படம் என்றார். மேலும் இயக்குநர் சிவா குறித்து பேசுகையில், சிவாவுடன் நீங்கள் ஒருமுறை பணியாற்றினால், அவரை விட மனசே வராது. அவர் வேறோரு இயக்குநருடன் பணியாற்றுவதை பார்த்தால் பொறாமைப்படுவீர்கள். அந்த வகையில் படப்பிடிப்பு அனுபவம் நிறைவாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: காயின் டாஸ்கில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட ஆண்கள் அணி... பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை!

சமீபத்தில் நான் அஜீத் சாரை சந்தித்த போது, "இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு" என கூறினார். நடிகர் அஜித்குமார் இயக்குநர் சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா கடைசியாக நடித்த திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’ அதனைத்டொடர்ந்து தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கங்குவா திரைப்படம் வெளியாகிறது. இதனால் பிரமாண்டமான முறையில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: இயக்குநர் சிவா குறித்து நடிகர் அஜித்குமார் கூறியதை கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டார். இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் கங்குவா. சூர்யா திரை வாழ்வில் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கங்குவா திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், உலகம் முழுவதும் ஓடிடியில் 38 மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே கங்குவா படத்தின் இரண்டு பாடல்கள் Fire song, Yolo ஆகியவை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கங்குவா திரைப்பட குழு தற்போது இந்தியா முழுவதும் தீவிர ப்ரமோஷனில் இறங்கியுள்ளது.

கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பேசுகையில், “இது தமிழில் உருவாகியுள்ள பாகுபலி போன்ற திரைப்படம் என்றார். மேலும் இயக்குநர் சிவா குறித்து பேசுகையில், சிவாவுடன் நீங்கள் ஒருமுறை பணியாற்றினால், அவரை விட மனசே வராது. அவர் வேறோரு இயக்குநருடன் பணியாற்றுவதை பார்த்தால் பொறாமைப்படுவீர்கள். அந்த வகையில் படப்பிடிப்பு அனுபவம் நிறைவாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: காயின் டாஸ்கில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட ஆண்கள் அணி... பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை!

சமீபத்தில் நான் அஜீத் சாரை சந்தித்த போது, "இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு" என கூறினார். நடிகர் அஜித்குமார் இயக்குநர் சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா கடைசியாக நடித்த திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’ அதனைத்டொடர்ந்து தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கங்குவா திரைப்படம் வெளியாகிறது. இதனால் பிரமாண்டமான முறையில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.