ETV Bharat / education-and-career

பொறியியல் படிப்பிற்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு: 50 ஆயிரத்து 451 இடங்கள் ஒதுக்கீடு! - TNEA SEAT ALLOTMENT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 8:41 AM IST

TNEA SEAT ALLOTMENT: பி.இ, பிடெக் பொறியியல் படிப்பில் 2ம் சுற்று கலந்தாய்விற்கு 1 லட்சத்து 56 ஆயிரத்து 734 இடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 50 ஆயிரத்து 451 மாணவர்களுக்கு கல்லூரிகளில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு 2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அதில், தரவரிசை எண் 26,655 முதல் 1,04,602 வரை 85 ஆயிரத்து 295 மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 50 ஆயிரத்து 451 மாணவர்களுக்கு கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2024 - 25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ, பிடெக் இளங்கலை படிப்பில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில், ஒற்றைச் சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு, 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதில் பி.இ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, கலந்தாய்வில் 19 ஆயிரத்து 922 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, 2ம் சுற்று பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், கட்ஆப் மதிப்பெண் 178.975 முதல் 142 வரை உள்ள 77,948 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலைத் தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாணவர்கள் இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்வதற்கான சேர்க்கை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் 20ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மேலும், 2ம் சுற்று கலந்தாய்வில் பொது பிரிவில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 713 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 21 இடங்களிலும் என‌ 1 லட்சத்து 56 ஆயிரத்து 734 இடங்கள் அனுமதிக்கப்பட்டது. இதில் 50 ஆயிரத்து 451 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பைடன் விலகல் சதி... சீனா, ரஷ்யா, வட கொரியா அதிபர்களுக்கு புகழாரம்- டிரம்ப் போடும் கணக்கு என்ன?

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு 2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அதில், தரவரிசை எண் 26,655 முதல் 1,04,602 வரை 85 ஆயிரத்து 295 மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 50 ஆயிரத்து 451 மாணவர்களுக்கு கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2024 - 25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ, பிடெக் இளங்கலை படிப்பில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில், ஒற்றைச் சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு, 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதில் பி.இ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, கலந்தாய்வில் 19 ஆயிரத்து 922 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, 2ம் சுற்று பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், கட்ஆப் மதிப்பெண் 178.975 முதல் 142 வரை உள்ள 77,948 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலைத் தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாணவர்கள் இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்வதற்கான சேர்க்கை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் 20ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மேலும், 2ம் சுற்று கலந்தாய்வில் பொது பிரிவில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 713 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 21 இடங்களிலும் என‌ 1 லட்சத்து 56 ஆயிரத்து 734 இடங்கள் அனுமதிக்கப்பட்டது. இதில் 50 ஆயிரத்து 451 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பைடன் விலகல் சதி... சீனா, ரஷ்யா, வட கொரியா அதிபர்களுக்கு புகழாரம்- டிரம்ப் போடும் கணக்கு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.