ETV Bharat / bharat

விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! விண்ணில் திக்.. திக்.. நிமிடங்கள்! - Vistara Flight Bomb threat

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 4:13 PM IST

ஸ்ரீநகர் நோக்கி சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Etv Bharat
Representation Image (ANI Photos)

ஸ்ரீநகர்: தலைநகர் டெல்லியில் இருந்து ஒரு குழந்தை உள்பட 177 பயணிகளுடன் ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டு இருந்த ஏர் விஸ்தாரா நிறுவனத்தின் UK-611 விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து விமானம் பத்திரமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.

இது குறித்து பேசிய விமான நிலைய அதிகாரி, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீநகரில் விஸ்தாரா விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறப்பட்டதாகவும், தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பீகாரில் வெப்பம் தாங்காமல் 80 பேர் பலி! தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை! - Bihar Heat Wave

ஸ்ரீநகர்: தலைநகர் டெல்லியில் இருந்து ஒரு குழந்தை உள்பட 177 பயணிகளுடன் ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டு இருந்த ஏர் விஸ்தாரா நிறுவனத்தின் UK-611 விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து விமானம் பத்திரமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.

இது குறித்து பேசிய விமான நிலைய அதிகாரி, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீநகரில் விஸ்தாரா விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறப்பட்டதாகவும், தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பீகாரில் வெப்பம் தாங்காமல் 80 பேர் பலி! தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை! - Bihar Heat Wave

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.