ETV Bharat / bharat

பாட்டியைக் கொன்று ரத்தத்தை சிவலிங்கத்தின் மீது பூசிய பேரன் - சத்தீஸ்கரில் பயங்கரம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நபர் தனது பாட்டியை கொன்று, அவரின் ரத்தத்தை சிவ லிங்கத்தின் மீது தடவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

கொலை தொடர்பான கோப்புப் படம்
கொலை தொடர்பான கோப்புபு் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் ஒரு நபர் தனது பாட்டியை கொன்று, அவரின் ரத்தத்தால் சிவ லிங்கத்தின் மீது எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள நன்கட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குல்ஷன் கோஸ்வாமி (வயது 35). இவர் நேற்று இரவு 7 மணி அளவில் தனது 70 வயதான பாட்டியை நாற்காலியில் கட்டி வைத்து கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. அதன்பின் தனது பாட்டியின் ரத்தத்தை சேகரித்து, அருகில் உள்ள கோயிலின் சிவலிங்கம் மீது “சிவன் இங்கே இருக்கிறார்” என்று ரத்தத்தால் எழுதியதாக கூறப்படுகிறது.

பின் தனது பாட்டியை தாக்கிய அதே ஆயுதத்தை கொண்டு, தன்னையும் தாக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அந்த வாலிபர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து நந்தினி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குல்ஷன் பாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் குல்ஷனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து நந்தினி காவல் நிலைய பொறுப்பாளர் மணீஷ் ஷர்மா கூறுகையில், “ இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரமம் தெரியவரும்” என்று கூறினார். துர்க் மாவட்டத்தில் ஒரு நபர் தனது பாட்டியை கொன்று, அவரின் ரத்தத்தைக் கொண்டு சிவலிங்கத்தின் மீது எழுதிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் ஒரு நபர் தனது பாட்டியை கொன்று, அவரின் ரத்தத்தால் சிவ லிங்கத்தின் மீது எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள நன்கட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குல்ஷன் கோஸ்வாமி (வயது 35). இவர் நேற்று இரவு 7 மணி அளவில் தனது 70 வயதான பாட்டியை நாற்காலியில் கட்டி வைத்து கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. அதன்பின் தனது பாட்டியின் ரத்தத்தை சேகரித்து, அருகில் உள்ள கோயிலின் சிவலிங்கம் மீது “சிவன் இங்கே இருக்கிறார்” என்று ரத்தத்தால் எழுதியதாக கூறப்படுகிறது.

பின் தனது பாட்டியை தாக்கிய அதே ஆயுதத்தை கொண்டு, தன்னையும் தாக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அந்த வாலிபர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து நந்தினி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குல்ஷன் பாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் குல்ஷனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து நந்தினி காவல் நிலைய பொறுப்பாளர் மணீஷ் ஷர்மா கூறுகையில், “ இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரமம் தெரியவரும்” என்று கூறினார். துர்க் மாவட்டத்தில் ஒரு நபர் தனது பாட்டியை கொன்று, அவரின் ரத்தத்தைக் கொண்டு சிவலிங்கத்தின் மீது எழுதிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.