ETV Bharat / bharat

ஜம்ம - காஷ்மீர்: தேடுதல் வேட்டையில் ராணுவ தளபதி வீரமரணம்; சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகள்! - indian army captain martyred

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 2:22 PM IST

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்துக்குட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ தளபதி வீரமரணம் அடைந்தார். பயங்கரவாதிகள் நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டர்
ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் (Image Credit - ETV Bharat)

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்துக்கு உட்பட்ட அகார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று மாலை (ஆக.13) இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து ஜம்மு -காஷ்மீர் மாநில போலீசுடன் இணைந்து இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது. இரவு நேரம் என்பதால் வனப்பகுதியில் இருள் கவ்வி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தேடுதல் வேட்டையை தற்காலிகமாக நிறுத்தும்படி ஆனது. இன்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மீண்டும் தொடர்ந்தது.

அப்போது பயங்கரவாதிகள் தோடா மாவட்டத்துக்குட்பட்ட அஜார் பகுதியில் ஓடும் ஆற்றுக்கு அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னேறி சென்றனர். அப்போது பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் தேடுதல் வேட்டையை முன்னெடுத்துச் சென்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இளம் தளபதி (48 வது படைப்பிரிவு) தீபக் சிங் படுகாயம் அடைந்தார். உடனே அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் வீரமரணம் அடைந்தார் என்று ராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும், மேலும் அவர்களிடமிருந்து ஒரு எம்4 ரக துப்பாக்கியும் கைப்பற்றபட்டதாகவும், பயங்கரவாதிகளுடனான சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: விழுந்து மடிந்த பெண்கள்.. பீகார் சித்தநாத் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி..!

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்துக்கு உட்பட்ட அகார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று மாலை (ஆக.13) இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து ஜம்மு -காஷ்மீர் மாநில போலீசுடன் இணைந்து இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது. இரவு நேரம் என்பதால் வனப்பகுதியில் இருள் கவ்வி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தேடுதல் வேட்டையை தற்காலிகமாக நிறுத்தும்படி ஆனது. இன்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை மீண்டும் தொடர்ந்தது.

அப்போது பயங்கரவாதிகள் தோடா மாவட்டத்துக்குட்பட்ட அஜார் பகுதியில் ஓடும் ஆற்றுக்கு அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னேறி சென்றனர். அப்போது பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் தேடுதல் வேட்டையை முன்னெடுத்துச் சென்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இளம் தளபதி (48 வது படைப்பிரிவு) தீபக் சிங் படுகாயம் அடைந்தார். உடனே அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் வீரமரணம் அடைந்தார் என்று ராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும், மேலும் அவர்களிடமிருந்து ஒரு எம்4 ரக துப்பாக்கியும் கைப்பற்றபட்டதாகவும், பயங்கரவாதிகளுடனான சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: விழுந்து மடிந்த பெண்கள்.. பீகார் சித்தநாத் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.