ETV Bharat / bharat

26 கிலோ நகையுடன் மாயமான வங்கி மேலாளர் கைது.. கோழிக்கோடு டூ தெலங்கானா வரை சுற்றியது எப்படி? - bank of maharashtra kerala theft

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 11:05 AM IST

Bank Of Maharashtra Kerala Branch Scam: பேங்க் ஆப் மகாராஷ்டிரா கோழிக்கோடு கிளையில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கைதான முன்னாள் மேலாளர் மதா ஜெயக்குமார்
கைதான முன்னாள் மேலாளர் மதா ஜெயக்குமார் (credit - ETV Bharat)

கோழிக்கோடு: கேரளாவில், பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த சுமார் 26 கிலோ தங்க நகைகளை திருடி சென்று மாயமான முன்னாள் மேலாளர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டின், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக்குமார் (34). இவர் கேரளாவின், கோழிக்கோட்டில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிக் கிளையில் மேலாளராக இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஜெயக்குமார், கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் அங்கு பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே, கோழிக்கோட்டில் உள்ள கிளைக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மறு மதிப்பீடு செய்தபோது, கடந்த ஜூன் 13 முதல் ஜூலை 6 வரை அடகு வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது.

உடனே மேலாளர் இர்ஷாத், இதுகுறித்து வடகரை போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கோழிக்கோடு கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்து இடமாற்றப்பட்ட மதா ஜெயக்குமார், பாலரிவட்டம் கிளையில் பொறுப்பேற்காமல், இருக்குமிடமும் தெரியாமல் இருந்து வந்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மதா ஜெயக்குமார் தெலுங்கானாவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் ஜெயக்குமாரை இன்று அதிரடியாக கைது செய்து கேரளா காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்போது கேரளா தனிப்படையினர் மாதா ஜெயக்குமாரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தெலுங்கானாவுக்கு விரைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே காணாமல் போன நகைகள் என்னானது என்பது குறித்த பல்வேறு தகவல்கள் தெரிய வரும்.

இதையும் படிங்க: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வயநாடு நிலச்சரிவின் சிசிடிவி காட்சிகள் வெளியானது!

கோழிக்கோடு: கேரளாவில், பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த சுமார் 26 கிலோ தங்க நகைகளை திருடி சென்று மாயமான முன்னாள் மேலாளர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டின், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக்குமார் (34). இவர் கேரளாவின், கோழிக்கோட்டில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிக் கிளையில் மேலாளராக இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஜெயக்குமார், கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் அங்கு பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே, கோழிக்கோட்டில் உள்ள கிளைக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மறு மதிப்பீடு செய்தபோது, கடந்த ஜூன் 13 முதல் ஜூலை 6 வரை அடகு வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது.

உடனே மேலாளர் இர்ஷாத், இதுகுறித்து வடகரை போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கோழிக்கோடு கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்து இடமாற்றப்பட்ட மதா ஜெயக்குமார், பாலரிவட்டம் கிளையில் பொறுப்பேற்காமல், இருக்குமிடமும் தெரியாமல் இருந்து வந்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மதா ஜெயக்குமார் தெலுங்கானாவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் ஜெயக்குமாரை இன்று அதிரடியாக கைது செய்து கேரளா காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்போது கேரளா தனிப்படையினர் மாதா ஜெயக்குமாரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தெலுங்கானாவுக்கு விரைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே காணாமல் போன நகைகள் என்னானது என்பது குறித்த பல்வேறு தகவல்கள் தெரிய வரும்.

இதையும் படிங்க: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வயநாடு நிலச்சரிவின் சிசிடிவி காட்சிகள் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.