ETV Bharat / bharat

பழைய குற்றவியல் சட்டங்கள் Vs புதிய குற்றவியல் சட்டங்கள்! வித்தியாசம் என்ன? - New Criminal Laws

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 1:36 PM IST

மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. இந்திய தண்டனை சட்டத்திற்கும், புதிதாக இயற்றப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்திற்கு என்ன வித்தியாசம் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

Etv Bharat
Representational image (ETV Bharat)

டெல்லி: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கடந்த 1860 முதல் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் அமலில் இருந்தன. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்‌ஷியா அதினியம் ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்திய இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டன.

இதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் தேசதுரோகம் என்பது நீக்கப்படு மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதுற்கு மரண தண்டனை வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தான் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஜீரோ எப்ஐஆர் என்று பெயர் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல காவல் துறையிடம் இணைய வழியில் புகார்களை பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் சம்மன் உள்ளிட்ட அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து வழக்குகளிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை காணொலி வழியில் பதிவு செய்வது கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய நாகரிக் சுரக்‌சா 2023 சட்டம், கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி உள்ளது. மேலும், விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார வழக்குகளில் கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் சொத்துக்களை வழக்கனின் ஆவணப் பட்டயங்களில் இணைக்கவும் உறுதிபடுத்துகிறது.

அதேபோல், இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய சாக்சியா அதினியம் சட்டம் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை பராமரிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்குகளின் ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயாக்கப்பட வேண்டும் என்றும் காகித வடிவிலான ஆவணங்களை போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களுக்கும் சட்ட அங்கீகாரம், மதிப்பு வழங்வதை இந்த சட்டம் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை தமிழ் தேசியத் தலைவர் ரா.சம்பந்தன் மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! - R sampanthan dies

டெல்லி: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கடந்த 1860 முதல் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் அமலில் இருந்தன. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்‌ஷியா அதினியம் ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்திய இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டன.

இதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் தேசதுரோகம் என்பது நீக்கப்படு மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதுற்கு மரண தண்டனை வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தான் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஜீரோ எப்ஐஆர் என்று பெயர் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல காவல் துறையிடம் இணைய வழியில் புகார்களை பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் சம்மன் உள்ளிட்ட அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து வழக்குகளிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை காணொலி வழியில் பதிவு செய்வது கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய நாகரிக் சுரக்‌சா 2023 சட்டம், கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி உள்ளது. மேலும், விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார வழக்குகளில் கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் சொத்துக்களை வழக்கனின் ஆவணப் பட்டயங்களில் இணைக்கவும் உறுதிபடுத்துகிறது.

அதேபோல், இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய சாக்சியா அதினியம் சட்டம் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை பராமரிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்குகளின் ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயாக்கப்பட வேண்டும் என்றும் காகித வடிவிலான ஆவணங்களை போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களுக்கும் சட்ட அங்கீகாரம், மதிப்பு வழங்வதை இந்த சட்டம் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை தமிழ் தேசியத் தலைவர் ரா.சம்பந்தன் மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! - R sampanthan dies

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.