ETV Bharat / bharat

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் முகாமிட்ட பாஜக முதலமைச்சர்கள்! - NITI Aayog meet

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 8:12 AM IST

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

Etv Bharat
BJP CM's (ANI Photo)

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015ஆம் ஆண்டில் மத்திய அரசு நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். நிதி ஆயோக்கின் உயர்நிலை அமைப்பான நிர்வாகக் குழுவின் 9வது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த குழு, அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியதாகும்.

வழக்கமாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் பங்கேற்று வந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் முதலமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்திருக்கின்றனர்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களுக்கு குறைவான அளவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இதே காரணத்திற்காக காங்கிரஸ் ஆளும் கா்நாடகம், இமாச்சல பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களான சித்தராமையா, சுக்விந்தா் சிங் சுக்கு, ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்ச பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

அதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் ரங்கசாமி, மற்றும் டெல்லி ஆம் ஆத்மி அரசும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. புதுச்சேரி தவிர்த்து இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருத்தி அமைக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! - NEET UG 2024 Final Result

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015ஆம் ஆண்டில் மத்திய அரசு நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். நிதி ஆயோக்கின் உயர்நிலை அமைப்பான நிர்வாகக் குழுவின் 9வது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த குழு, அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியதாகும்.

வழக்கமாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் பங்கேற்று வந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் முதலமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்திருக்கின்றனர்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களுக்கு குறைவான அளவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இதே காரணத்திற்காக காங்கிரஸ் ஆளும் கா்நாடகம், இமாச்சல பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களான சித்தராமையா, சுக்விந்தா் சிங் சுக்கு, ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்ச பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

அதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் ரங்கசாமி, மற்றும் டெல்லி ஆம் ஆத்மி அரசும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. புதுச்சேரி தவிர்த்து இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருத்தி அமைக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! - NEET UG 2024 Final Result

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.