ETV Bharat / bharat

உத்தரபிரதேசத்தில் வாட்ஸ்அப்பில் கசிந்த +2 தேர்வு வினாத்தாள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 12:44 PM IST

Question Papers Shared On Whatsapp: உத்தரபிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், கணிதம் மற்றும் உயிரியல் வினாத்தாள்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டு வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாள் வாட்ஸ்அப் குழுவில் பகிர்வு
உத்தரபிரதேசம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் கணிதம் மற்றும் உயிரியல் வினாத்தாள்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் (DIOS -District Inspector of Schools ) தினேஷ் குமார், பதேபூர் சிக்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், பதேபூர் சிக்ரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து, அதர் சிங் இன்டர் கல்லூரியின் (Atar Singh Inter College) முதல்வர் ராஜ்ஹௌலி, அவரது மகன் மற்றும் பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ‘ஆல் பிரின்சிபல்ஸ் ஆக்ரா’ (All Princiapls Agra) என்ற வாட்ஸ் அப் குழுவில், பொதுத்தேர்வு வினாத்தாள்கள், அதர் சிங் இன்டர் கல்லூரியின் முதல்வரின் மகனால் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து, இடைநிலைக் கல்வித் துறையின் இணை இயக்குநரும், தேர்வு கண்காணிப்பாளருமான முகேஷ் அகர்வால் கூறுகையில், "தேர்வு நேரத்தில் வினாத்தாள் வெளியானது குறித்து நாங்கள் ஒரு உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளோம். மேலும், இது தொடர்பாக முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்திற்கு எதிராக வினாத்தாளை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரபிரதேசத்தில் நடந்த அரசு தேர்வுகளிலும் வினாத்தாள்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் நினைவிடம் முதல் தொண்டர்கள் சந்திப்பு வரை.. முழுவிவரம்!

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் கணிதம் மற்றும் உயிரியல் வினாத்தாள்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் (DIOS -District Inspector of Schools ) தினேஷ் குமார், பதேபூர் சிக்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், பதேபூர் சிக்ரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து, அதர் சிங் இன்டர் கல்லூரியின் (Atar Singh Inter College) முதல்வர் ராஜ்ஹௌலி, அவரது மகன் மற்றும் பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ‘ஆல் பிரின்சிபல்ஸ் ஆக்ரா’ (All Princiapls Agra) என்ற வாட்ஸ் அப் குழுவில், பொதுத்தேர்வு வினாத்தாள்கள், அதர் சிங் இன்டர் கல்லூரியின் முதல்வரின் மகனால் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து, இடைநிலைக் கல்வித் துறையின் இணை இயக்குநரும், தேர்வு கண்காணிப்பாளருமான முகேஷ் அகர்வால் கூறுகையில், "தேர்வு நேரத்தில் வினாத்தாள் வெளியானது குறித்து நாங்கள் ஒரு உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளோம். மேலும், இது தொடர்பாக முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்திற்கு எதிராக வினாத்தாளை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரபிரதேசத்தில் நடந்த அரசு தேர்வுகளிலும் வினாத்தாள்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் நினைவிடம் முதல் தொண்டர்கள் சந்திப்பு வரை.. முழுவிவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.