திருப்பூர் கல்லூரி சாலை காளிபாளையம் புதூரில் உள்ள சங்கிலிகருப்பராயன் கோயிலில் நேற்றிரவு (ஆகஸ்ட் 3) அடையாளம் தெரியாத நபர்கள் சாமி சிலைகளை உடைத்துள்ளனர். இதனையடுத்து இன்று (ஆகஸ்ட் 4) காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலை உடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் வேலம்பாளையம் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.