தமிழ்நாடு

tamil nadu

தாராபுரத்தில் சிகை திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் இலவச அரசி!

By

Published : May 15, 2020, 7:14 PM IST

திருப்பூர்: தாராபுரத்தில் 200 சிகை திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் திருப்பூர் புறநகர மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் இலவச அரிசி பை தொகுப்பை வழங்கினார்.

தாராபுரத்தில் சிகை திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் இலவச அரசி!
தாராபுரத்தில் சிகை திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் இலவச அரசி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிகை திருத்தும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவல் நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இருப்பினும், சிகை திருத்தும் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வருமானமின்றி இவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 200 சிகை திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் 10 கிலோ மதிப்புள்ள அரிசி பைகளை வழங்கினார். இதில் தாராபுரம் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

இதையும் படிங்க:பெரம்பலூரில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி!

ABOUT THE AUTHOR

...view details