தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரவிட்டதன் பேரில் கடந்த மாதம் முதல் தவணையாக 2ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது தவணையாக 2ஆயிரம் ரூபாய, 14 வகை மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று (ஜூன் 15) முதல் வழங்கப்பட்டது.