தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5ஆயிரத்து796 நபர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 119 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மட்டும் 880 பேர்கள் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இன்று 66 பேர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.