கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏழுமலை. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று (நவ.5) மதியம் காற்று வேகமாக வீசியதில், மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பொறிகள் ஏழுமலையின் குடிசையில் பட்டு, தீ வேகமாகப் பரவத் தொடங்கியது.
இந்த தீ அருகில் இருந்த ரங்கசாமி, சின்னத்தம்பி, இளையராஜா, நாராயணன் ஆகியோரது வீடுகளுக்கும் வேகமாகப் பரவியது. இந்த விபத்தில் 5 வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.