திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்றின் காரணமாக தடை உத்தரவு செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. உயர் நீதிமன்ற உத்திரவின் பேரில் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது .
தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நெகிழி மாசில்லா கொடைக்கானல் என்ற தலைப்பில் வணிகர்கள் ,ஹோட்டல் உரிமையாளர்கள் , பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்,பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைக்கப்பட்டது கூட்டத்தில் பேசிய வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா காலகட்டத்தில் வாட்டர் பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் தேக்கம் அடைந்து இருப்பதாகவும், ஆகவே கூடுதலாக கால அவகாசம் வேண்டுமெனவும் தெரிவித்தனர்.