சென்னை: தமிழ்நாட்டில் நெகிழி ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் நெகிழி ஒழிப்பினைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தற்போது சுற்றுச்சூழல் துறை சார்பாக அரிசி, தவிடு மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை பேக் செய்யும் பெட்டி, நீர் அருந்தும் டம்ளர் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இது குறித்து சுப்ரியா சாஹு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.