தமிழ்நாடு

tamil nadu

ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கு - போலீசார் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!

By

Published : May 29, 2023, 7:51 PM IST

ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சங்கர் நகர் பகுதியில் விறகு கடை நடத்தி வந்த கணேசன் என்பவரை, விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்தது தொடர்பான வழக்கில் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இது குறித்து கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில், குண்டு வெடிப்பு சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாத தன்னை கைது செய்து நான்கு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்திருந்ததாகவும், இதுதொடர்பாக கியூ பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தவறு செய்யாமல் தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு இழப்பீடு வழங்கவும், அந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் உரிய நடைமுறைகளை பின்பற்றிதான் கைது செய்யப்பட்டதாகவும், சிறையில் இருந்த காலத்தில் குற்றச்சாட்டை சொல்லவில்லை எனவும், சட்டவிரோத காவலுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்த மேல்முறையீடு மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இந்த வழக்கை ஏற்க கூடாது என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கணேசனை சட்டவிரோத காவலில் காவல் துறையினர் வைத்ததாக கூறுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என கூறி, நிலுவையில் உள்ள மேல்முறையீடு வழக்கில் நிவாரணம் கோரலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பள்ளி மாணவி கத்தியால் குத்தி கொடூர கொலை.. தலைமறைவு இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details