சென்னை:கடந்த 10 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து அரிய வகை குரங்கான உராங்குட்டான் என்னும் 4 ஜோடி குரங்குகளை ஒரு கும்பல் கடத்தி வந்துள்ளது. இது குறித்து செங்குன்றம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
ஆனால், அந்த கும்பலை கைது செய்யாமல் காவல் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.