தமிழ்நாடு

tamil nadu

லஞ்சம் வாங்கிக்கொண்டு கடத்தல் கும்பலை விட்ட 4 காவலர்கள் சஸ்பெண்ட்!

By

Published : Feb 26, 2023, 7:00 AM IST

அரியவகை உராங்குட்டான் குரங்கை கடத்திச் சென்றவர்களை கைது செய்யாமல் கையூட்டு வாங்கிய நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:கடந்த 10 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து அரிய வகை குரங்கான உராங்குட்டான் என்னும் 4 ஜோடி குரங்குகளை ஒரு கும்பல் கடத்தி வந்துள்ளது. இது குறித்து செங்குன்றம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

லஞ்சம் வாங்கிய காவலர்கள்

ஆனால், அந்த கும்பலை கைது செய்யாமல் காவல் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கிய காவலர்கள்

இதுகுறித்தான புகார் மேலிடத்திற்குச் சென்ற நிலையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர், 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தீரன் பட பாணி.. நீலகிரியில் பவாரியா கும்பல்.. வனப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு..

ABOUT THE AUTHOR

...view details