தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீபெரும்புதூரில் புறக்காவல் அறையை திறந்துவைத்த டிஎஸ்பி!

By

Published : Nov 23, 2020, 8:12 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் புறக்காவல் அறையை ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்துவைத்தார்.

ps
ps

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இந்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் ஹூண்டாய், ஸ்விங் ஷட்டர், அசாய் போன்ற பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்வது வழக்கம்.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அதிகப்படியான சாலை விபத்தும் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும்வகையில் ஹூண்டாய் நிறுவனத்தின் உதவியுடன் புறக்காவல் அறை அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தனியார் மூலம் மூன்று காவலர்களும் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறை சார்பாக ஒரு காவலரும் என மொத்தம் நான்கு காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று, இந்த புறக்காவல் அறையை ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்துவைத்தார். மேலும், பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details