சென்னை:சென்னையை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு நிறுவனம் சிமெண்ட், கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் என இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஆந்திரா, கர்நாடக, மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு 9-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் செட்டிநாடு குழுமம் 700 கோடி ரூபாய் வரை வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாபத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரிதுறையினர் உறுதி செய்தனர். மேலும் கணக்கில் வராத பணம் ரூபாய் 23 கோடியையும் பறிமுதல் செய்யப்பட்டது.
செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆவணங்களையும் வருமான வரிதுறையினர் கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் செட்டிநாடு குழுமத்தின் மீது கறுப்புப் பண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.