தமிழ்நாடு

tamil nadu

தீபாவளியில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு குறைவு - கெஜ்ரிவால்

By

Published : Oct 29, 2019, 3:01 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு காற்று மாசு அளவு குறைந்திருக்கிறது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

arvind kejeriwaal on air pollution

தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அம்மாநிலத்தில் காற்று மாசுபாடு என்பது சவாலான விஷயமாக இருந்து வருகிறது.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'தீபாவளி அன்று டெல்லியில் 24 இடங்களில் காற்று மாசு அளவுகளை அரசு துல்லியமாக அளவீடு செய்தது. அதன் முடிவுகளின் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு காற்று மாசு குறைந்திருக்கிறது.

மேலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு டெல்லி மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கான பெண் காவலர்களின் எண்ணிக்கை 13,000 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details