டெல்லி: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற பார்படோஸில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அங்கு பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், அங்கு பெரில் புயல் தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய வீரர்கள் அங்குள்ள விடுதிகளில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பார்படோசில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு திரும்ப அழைத்து வர ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் அங்கு பறந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை.3) பார்படோசில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் புறப்படும் இந்திய வீரர்கள் நாளை காலை 6 மணி அளவில் தலைநகர் டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister Narendra Modi to meet Men's Indian Cricket Team tomorrow at 11 am.
— ANI (@ANI) July 3, 2024
The Team that is bringing home the #T20WorldCup2024 trophy, will arrive from Barbados tomorrow, July 4, early morning. pic.twitter.com/UvUyxniQLJ