ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை சந்திப்பில் ஒரு பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு மட்டன் பிரியாணி சாப்பிட வந்த ஜெனோவா என்ற பெண், சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள தனது குழந்தைகளுக்கும் பிரியாணி பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரியாணி பொட்டலத்தை பிரிக்க எடுத்துள்ளார். அப்போது பொட்டலத்தின் மேற்பரப்பிலும், வெங்காய பச்சடியை அடைத்து வைத்திருந்த கவரின் அடிப்பகுதியிலும், ரத்தக்கறைப் படிந்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
குழந்தைகளுக்கு வாங்கி சென்ற பிரியாணி பார்சலில் இரத்தக்கறை - தாய் அதிர்ச்சி!
Published : Jul 4, 2024, 5:37 PM IST
இரத்தகறைப் படிந்த பிரியாணி பார்சல் (CREDITS - ETV Bharat Tamil Nadu)
இதனைத் தொடர்ந்து அவர் தனது கணவருடன் அந்த ஓட்டலுக்கு சென்று சுகாதாரமற்ற பிரியாணி தமக்கு கொடுத்ததாகக் கூறி, ஓட்டல் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டலை சோதனை நடத்தி இச்சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை வைத்துள்ளார்.