தமிழ்நாடு

tamil nadu

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 10:53 PM IST

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா, "தமிழ்நாட்டில் மட்டும் விஷச்சாராய மரணங்கள் நிகழவில்லை. இந்தியா முழுவதும் விஷச்சாராய உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளன. ஒரே நாளில் நடப்பதால் விஷச்சாராய சாவுகள் பெரிதாக தெரிகின்றன. ஆனால், டாஸ்மாக் மூலம் கொஞ்சம் கொஞ்மாக தமிழ்நாட்டு மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

மது மக்களின் வாழ்வையும், குடும்ப பொருளாதாரத்தையும் சீரழித்து வருகிறது. பீகார், குஜராத், மிசோரம், லட்சத்தீவு போன்ற இடங்களில் முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ளது. குறிப்பாக, பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அம்மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து முயற்சி எடுப்போம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details