ETV Bharat / snippets

சித்தூர் ஏடிஎம்மில் முகமூடி அணிந்து கைவரிசை.. ரூ.25 லட்சம் திருட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 5:38 PM IST

கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம்
கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலம் வேலூர்-சித்தூர் சாலை எம்.பி.டி.ஓ அலுவலகத்தின் அருகே தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை ஏடிஎம் உடைந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குடிபாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் டிஎஸ்பி ராஜகோபால் ரெட்டி, மேற்கு ஆய்வாளர் ரவிசங்கர் ரெட்டி, எஸ்எஸ்ஐ நரேந்திரன் சன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 3 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த ரூ.25,98,400 பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர்: சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலம் வேலூர்-சித்தூர் சாலை எம்.பி.டி.ஓ அலுவலகத்தின் அருகே தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை ஏடிஎம் உடைந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குடிபாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் டிஎஸ்பி ராஜகோபால் ரெட்டி, மேற்கு ஆய்வாளர் ரவிசங்கர் ரெட்டி, எஸ்எஸ்ஐ நரேந்திரன் சன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 3 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த ரூ.25,98,400 பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.