தமிழ்நாடு

tamil nadu

பாஜக செயலாளர் அஸ்வத்தாமனுக்கு முன் ஜாமீன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 6:32 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன், ஜூலை 7ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழக சிவ சேனாவின் முன்னாள் தலைவர் தங்க முத்து கிருஷ்ணன் மனைவி தங்கம் அம்மாளின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சு பேசியதாக நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச் செல்வி, அஸ்வத்தாமனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வாரந்தோறும் நாகூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் வெறுப்பு பேச்சு பேசமாட்டேன் என உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details