வேலூர்:வங்க தேசத்தைசேர்ந்த நபர் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்து, வேலூரில் தங்கி இருப்பதாக வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வேலூரில் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த வங்கதேச இளைஞர் கைது!
Published : Aug 1, 2024, 12:34 PM IST
அந்தத் தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட நபரின் ஆவணங்களை சரி பார்க்கும் போது அவர் வங்கதேசத்தைசேர்ந்த பிமல் சுத்ரா தார் (வயது 33) என்றும், திரிபுராவில் லக்ஷ்மன் தாஸ் என்ற பெயரில் போலியான பாஸ்போர்ட் பெற்று வேலூரில் வந்து தங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பிமல் சுத்ராவை கைது செய்த போலீசார் இவர் வேலூருக்கு வந்த காரணம் என்ன? தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதா? போலியான இந்திய ஆவணங்கள் இவருக்கு எப்படி கிடைத்தன? என்ற பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.