தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

பேருந்து நிலைய கழிவறையில் கிடந்த பச்சிளம் குழந்தை.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 6:54 AM IST

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம்
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் உயிருடன் பெண் குழந்தை ஒன்று இருப்பதாக கழிப்பிடத்திற்கு சென்றவர்கள் கூறியதன் பேரில் கழிப்பிடத்தை நிர்வகிக்கும் ஊழியர்கள் சென்று பார்த்தபோது தொப்புள் கொடியுடன் பிறந்த உயிருடன் உள்ள பெண் குழந்தையை தரையில் கிடத்தி கழிப்பிடத்தில் இருந்த பிளாஸ்டிக் வாலியால் மூடி வைத்துவிட்டு குழந்தையை பெற்றெடுத்த தாய் மாயமாகியுள்ளார்.

உடனடியாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆட்டோவில் குழந்தையை தூக்கிக் கொண்டு மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். நவீன கட்டண கழிப்பிடத்திலேயே குழந்தையை பெற்றெடுத்து, அங்கேயே விட்டு சென்றாரா? அல்லது யாருக்கும் தெரியாமல் குழந்தையை மறைத்து எடுத்து வந்து கழிப்பிடத்தில் விட்டு சென்றாரா? என்ற கோணத்தில் இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details