தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்; பைக் உள்ளே விழுந்து விபத்து - vellore bike accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 1:41 PM IST

பள்ளத்திற்குள் விழுந்த பைக் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் - பெங்களூரு சாலையில் உள்ள மாங்காய் மண்டி பகுதியில் வேலூர் மாநகராட்சி சார்பில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக இதற்கான பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், எதிர்பாராதவிதமாகப் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த நபருக்குக் காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் இந்த பணி மெத்தனமாக நடைபெறுவதன் காரணமாக, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்படுவதாகவும், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வெண்டுமெனவும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 அவர்களின் இக்கோரிக்கையை அடுத்து, உடனே அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உள்ளதாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

ABOUT THE AUTHOR

...view details