தமிழ்நாடு

tamil nadu

துணி வாங்குவது போல் நடித்து செல்போன் திருட்டு.. வைரலாகும் சிசிடிவி காட்சி - Cloth shop theft cctv

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 9:12 PM IST

துணிக்கடையில் செல்போன் திருடிய சிசிடிவி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் துணிக்கடையில் ஆடை வாங்குவது போல் நடித்து, கடையில் வைத்திருந்த உரிமையாளரின் செல்போனை திருடிச் சென்ற நபரை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆமின் நிஹால் மாண்டியா. வாணியம்பாடி- இக்பால் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஆடை வாங்குவது போல் நடித்து, கடையில் வைத்திருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளார்.

இது குறித்து ஆமிர் நிவாஸ் மண்டியா வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடையில் பொருந்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செல்போனை திருடிச் சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆடை வாங்குவது போல் நடித்து கடையில் வைத்திருந்த உரிமையாளரின் செல்போனை திருடிச் சென்ற நபரின் சிசிடிவி சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details