தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

மனிதனை ஆள்கடல் ஆராய்ச்சிக்கு அனுப்பும் சமுத்திரயான் திட்ட சோதனை வெற்றி!

சமுத்திரயான் திட்டத்தின் கீழ் MATSYA 6000 நீர்மூழ்கிக் கப்பல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MATSYA 6000 நீர்மூழ்கிக் கப்பல்
MATSYA 6000 நீர்மூழ்கிக் கப்பல் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ஹைதராபாத்:சென்னை பள்ளிக்கரணையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) இந்தியாவின் சமுத்திரயான் திட்டத்தின் கீழ் MATSYA 6000 வாகனத்தை உருவாக்க உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது.

இந்த MATSYA 6000 வாகனம் என்பது நீருக்கடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இந்த வாகனம் கோள வடிவில் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 6.6 மீட்டர் நீளமும், 210 டன் எடையும், 6,000 மீட்டர் ஆழத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேதியியல் பல்லுயிர் மற்றும் நீர் வெப்ப துவாரங்கள் உட்பட ஆழ்கடல் சூழலை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களை அனுமதிப்பது இதன் நோக்கமாக உள்ளது. மேலும், இந்த நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடலுக்கு அடியில் இருக்கும் அரிய தாதுக்களையும் ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் 48 மணிநேர மூழ்கி இருந்து ஆராய்ச்சி செய்யக்கூடியவை. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் துறைமுகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நீர்மூழ்கி கப்பலை கையாளுபவர்களுக்கான (மனிதன்) இடம், ஆராய்ச்சிக்கான கனிம மாதிரி தட்டு மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதில், நீர்மூழ்கிக் கப்பலை கையாளுபவர்களுக்கென 2.1 மீட்டர் உள் விட்டம் கொண்ட தனி பகுதி உருவக்கப்பட்டுள்ளது. இந்த நீர்முழ்கி கப்பலை கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ஸிஜன் ஊசி அமைப்பு, கார்பன் டை ஆக்சைடு அகற்றும் பொறிமுறை, சென்சார்கள், கட்டுப்பாட்டு வன்பொருள், தீ கண்காணிப்பு, அணைப்பான்கள் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கியது.

இதையும் படிங்க:SpaceX: ஏழு மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!

இந்த நீர்முழ்கி கப்பலை இயக்குவதற்காக முன்னாள் கடற்படை அதிகாரிகள் இரண்டு என்ஐஓடி விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த நீர்முழ்கி கப்பல் வாகனத்தை சமுத்திரயான் திட்டத்தின் கீழ் வரும் 2026ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரசெய்வதை குறிக்கோளாக வைத்து ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல் வாகனம் மனிதர்களை பாதுகாப்பாக ஆள்கடலில் கொண்டு சேர்க்கிறதா? ஆராய்ச்சியில் மனிதன் பாதுகாப்பாக ஆள்கடலில் இருப்பதற்கு ஏதுவாக இந்த வாகனம் உள்ளதா? என மனித ஆதரவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கான (HS3) சோதனை முயற்சி இன்று நடைபெற்ற நிலையில் அது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்த சோதனையில் நீர்மூழ்கி கப்பல் சாதரண நிலையில் 12 மணிநேரமும், அவசர கால நிலைகளில் 96 மணிநேரம் வரை மூன்று நபர்களுடன் ஆராய்ச்சியில் இறங்குவதற்கு சரியானதாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து என்ஐஓடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சோதனை OEM யுனிக் குழுமத்தின் உதவியுடன் DNV மரைன் சர்வேயர் முன்னிலையில் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details