தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மாமியார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மருமகள்... வைரலாகும் பரபரப்பு வீடியோ! - mother in law attacked

Mother in law attacked in Chennai: சென்னையில் கணவனுக்கு இடையே பிரச்னை ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறி, மருமகள் மாமியாரை தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 8:03 PM IST

மாமியார் தாக்கப்பட்ட சிசிடிவி படம்
மாமியார் தாக்கப்பட்ட சிசிடிவி படம் (Image Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த பிரேமா (66) என்பவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், அவரது இளையமகன் தனசேகருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. தனசேகர் மற்றும் சாமுண்டீஸ்வரி இணைந்து கேளம்பாக்கத்தில் வீடு ஒன்று கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மாமியாரை மருமகள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக தனசேகர் மற்றும் சாமுண்டீஸ்வரிக்கு இடையே வீடு சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சனையால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும், இவர்களின் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி, தி.நகர் பகுதியில் உள்ள வீட்டில் பிரேமா தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சாமுண்டீஸ்வரி பிரேமாவை கத்தியால் தாக்கி, அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரேமா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:ரயிலில் பயணிகளுக்கு மயக்க காபி கொடுத்து கைவரிசை காட்டிய இளம்பெண் கைது!

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அவர் புகார் அளித்துள்ளார். சாமூண்டீஸ்வரி அவரது மாமியார் பிரேமாவை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரேமா மற்றும் அவரது மகன் தனசேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதிதாக கட்டிய வீட்டில் குடியேறிவிடலாம் என்றும், தனது வீட்டை மாற்றிக்கொடுக்கும் படியும் தொடர்ச்சியாக சாமுண்டீஸ்வரி தொல்லை கொடுத்ததால் விவகாரம் விவாகரத்து வரை சென்றது.

இதனால் ஆத்திரத்தில் எனது தாயை சாமுண்டீஸ்வரி வீடு புகுந்து தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தாயும், மகனும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தற்கொலைக்கு முயன்ற தாயுடன் இருந்த மகனுக்கு விபரீதம்.. திருமணத்துக்கு மீறிய உறவினால் சோகம்!

ABOUT THE AUTHOR

...view details