தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன நிலங்களை அளவிட இனி ஜிபிஎஸ் கருவி.. நெல்லையில் நடந்த டிஜிட்டல் பயிற்சி!

டிஜிட்டல் முறையில் ஜிபிஎஸ் கருவி கொண்டு எளிதில் வன நிலங்களை அளவீடு செய்ய நெல்லையில் சிறப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியில் வனத்துறையினர்
பயிற்சியில் வனத்துறையினர் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருநெல்வேலி:தமிழகத்தில் 22,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளது. தலைமை வன பாதுகாவலர் தலைமையிலான வனத்துறையினர் இதனை முழுமையாக நிர்வகித்து வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வனப்பகுதிகள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. வனக்கோட்டம் மற்றும் வனச்சரகங்களாக வனப்பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு, வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.

வன விலங்குகளின் நடமாட்டம், விலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வனக் காவலர்கள், வனவர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு அந்தந்த ரேஞ்ச் வாரியாக பணி ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வன நிலங்களை வனச்சரக ரீதியாக வரையறுப்பதிலும், மாநில வன எல்லைகளை துல்லியமாக வரையறுப்பதிலும் வனத்துறைக்கு பெரும் சிரமம் இருந்து வருகிறது.

குறிப்பாக, விலங்குகள் ஏதாவது உயிரிழந்து விட்டாலோ அல்லது விலங்குகளைக் கணக்கெடுக்கும்போது குறிப்பிட்ட எல்லையைக் கணக்கிட்டு பிரச்னையை சரி செய்வதிலும் பெரும் சிரமம் இருந்து வருகிறது. எனவே, டிஜிட்டல் முறையில் ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு துல்லியமாக வனப் பகுதிகளை வரையறுக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தீயிட்டுக் கொளுத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

விரைவில் களப்பணியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி, நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இன்று ஜிபிஎஸ் கருவியின் பயன்பாடு குறித்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து தலா ஆறு நபர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். அப்ளிகேஷன் பொறியாளர் விக்னேஷ் குமார் இந்த பயிற்சியை அளித்தார். பயிற்சியின் போது ஜிபிஎஸ் கருவியை கையாளுவது எப்படி, அந்த கருவியைக் கொண்டு டிஜிட்டல் முறையில் நிலங்களை அளவீடு செய்வது எப்படி என்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details