தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்; JSW உடன் முக்கிய ஒப்பந்தம்! - Thoothukudi VOC Port

Thoothukudi VOC Port: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பொது சரக்குகளைக் கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3ஐ இயந்திரமயமாக்குவதற்கு JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 4:44 PM IST

Thoothukudi VOC Port
ஒப்பந்தம் கையெழுத்தானபோது எடுக்கப்பட்ட புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் பொது சரக்குகளை கையாள்வதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3ஐ இயந்திரமாக்குவதற்கான 30 வருட சலுகை ஒப்பந்தமானது, துறைமுகம் ஆணையத்திற்கும் ஜேஎஸ்டபிள்யூ (JSW) தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட்-க்கும் இடையே கையெழுத்தானது.

இதன்படி, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் சார்பாக சுசாந்த் குமார் புரோஹித், வஉ சிதம்பரனார் துறைமுகம் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ (JSW), தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் சார்பாக மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் இணைந்து, துறைமுக நிர்வாக அலுவலகத்தில், துறைமுக ஆணையத்தின் துணைத்தலைவர் சுரேஷ் பாபு மற்றும் JSW தூத்துக்குடி பல்நோக்கு மையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கு சரக்கு தளம் -3, சுமார் ரூபாய் 265.15 கோடி திட்ட மதிப்பில் இயந்திரமயமாக்கமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் துறைமுகத்தில் கூடுதலாக வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். வடக்கு சரக்கு தளம் மூன்றை 30 ஆண்டுகளுக்கு சலுகையாளர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான சாலை மற்றும் கிரேன் செயல்பாடுகள் கன்வேயர் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்தல், சரக்கு கையாளுவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்தல் போன்றவற்றை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டமானது, டிசம்பர் 2026க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் 3ல் பெரிய பனாமாக்ஸ் கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக தளத்தின் மிதவை ஆழத்தினை 14.20 மீட்டர் ஆழப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தளம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் மற்றும் ராக்பாஸ்பேட் போன்ற சரக்குகளை மொத்தமாக கையாளும் வசதியை பெறும். இதன் மூலம் அதிக முதலீட்டாளரை ஈர்ப்பது மட்டுமல்லாமல், கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வாய்ப்பினை உருவாக்கும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடலின் போது, சுசாந்த் குமார் புரோகித் கூறுகையில், 306 மீட்டர் தள நீளம் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பொது சரக்கு முனையமானது மொத்த சரக்குகளைக் கொண்ட 80,000 DWT கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும் என்றார். இதனால் இறக்குமதியாளர்களுக்கு பொருளாதாரத்தின் பலனை அடைய முடியும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் டிஜிட்டல் கடல்சார் பாடத்தில் எம்பிஏ படிப்பு துவக்கம்!

ABOUT THE AUTHOR

...view details