திருவள்ளூர்:திருமழிசை தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது அனைத்து தொழிற்சாலைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து எந்திரங்கள் பழுதாகி உற்பத்தி பாதிக்கப்பட்டன. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இதை அடுத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் தொழிற்பேட்டை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க நீர் வெளியேற்று கால்வாய்களை தூர்வார வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், வரும் வடகிழக்கு பருவ மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு தொழிற்பேட்டை வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் தொழிற்பேட்டை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் மற்றும் நீர் வழி கால்வாய்கள் மழைநீர் வெளியேற்று கால்வாய்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர், “கடந்த முறை மழைக்காலங்களில் மழை நீர் புகுந்து பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில், வரும் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேற்றுவதற்கான நீர் வெளியேற்று கால்வாய்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள வழித்தடங்களை பார்வையிட்டு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.