தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி - முதலமைச்சர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

போக்குவரத்துக்‌ கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கான நிதிப்பலன்களை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை: தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரிந்து, டிசம்பர்‌ 2022 முதல்‌ மார்ச்‌ 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும்‌ விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள்‌ என மொத்தம்‌ 1,279 பயணாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத்‌ தொகை மற்றும்‌ ஓய்வூதிய ஒப்படைப்புத்‌ தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதே போன்று தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், போக்குவரத்து கழகங்களில்‌ கடந்த ஏப்ரல்‌ 2022 முதல்‌ நவம்பர்‌ 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும்‌ இறந்த பணியாளர்கள்‌ என மொத்தம்‌ 3,414 பயணாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும்‌ ஓய்வூதிய ஒப்படைப்புத்‌ தொகை உள்ளிட்ட பணப்‌ பலன்களுக்காக ரூ.1,031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிடப்பட்டு இதற்கான நிதி வழங்கப்பட்டது. சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களில் கடும்‌ நிதிநெருக்கடி இருந்த போதிலும் , தொழிலாளர்களின்‌ நலனில்‌ அக்கறை கொண்ட வகையில், கடந்த டிசம்பர்‌ 2022 முதல்‌ மார்ச்‌ 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும்‌ விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள்‌ என மொத்தம்‌ 1,279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத்‌ தொகை மற்றும்‌ ஓய்வூதிய ஒப்படைப்புத்‌ தொகை உள்ளிட்ட பணப்‌ பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details