சென்னை:தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தலைவர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மே.6 முதல் ஜூன்.6 வரை நடைபெற்றது. அதில் 2,49,918 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர் மற்றும் 2,06,012 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு! - ENGINEERING ADMISSION EXTEND
Published : Jun 9, 2024, 10:17 PM IST
|Updated : Jun 10, 2024, 9:36 AM IST
Engineering Admission: பி.இ (B.E), பி.டெக் (B.Tech) பொரியியல் படிப்பில் சேருவதற்கு நாளையும், நாளை மறுநாளும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு கால நீட்டிப்பு வழங்கி அறிவித்துள்ளது.
![பொறியியல் படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு! - ENGINEERING ADMISSION EXTEND அண்ணா பல்கலைக்கழகம் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-06-2024/1200-675-21673890-thumbnail-16x9-en.jpg)
தற்பொழுது மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு மாணவர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன்.10, 11 ஆகிய இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி, தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போகம் நடவுப் பணிகள் தீவிரம்! - PADDY FARMING FROM CUMBAM VALLEY