தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 11:19 AM IST

ETV Bharat / state

வைகாசி மாத பிரதோஷம்: அண்ணாமலையார் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்! - Vaikasi Prathosham

Vaikasi Prathosham in Annamalaiyar Temple: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு, நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

Nandivarman in special abhishekam
சிறப்பு அபிஷேகத்தில் நந்திவர்மன் (Credits - ETV Bharat Tamil Nadu)

அண்ணாமலையார் கோயில் வைகாசி மாத பிரதோஷ நிகழ்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை:வைகாசி மாத பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. பௌர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம். இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவாலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு நேற்று மாலை வைகாசி மாத பிரதோஷம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வைகாசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனிடையே மழை பெய்த போதும், பக்தர்கள் யாரும் கலைந்து செல்லாமல் குடையுடன் நின்று நந்திவர்மனை வழிபட்டனர்.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நேற்று நடைபெற்ற வைகாசி மாத பிரதேஷத்தில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு களித்து, அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் கொடியேற்ற விழாவில் இசைக்கேற்ப நடனமாடிய யானை! - Sri Gnanapureeswarar Temple

ABOUT THE AUTHOR

...view details