தமிழ்நாடு

tamil nadu

ஒரு ஆளுக்கு 50 மில்லி மண்ணெண்ணெய் தான்.. விலையோ ரூ.2 தான் - கொல்லங்குடி நியாய விலைக்கடையில் நடப்பது என்ன? - 50 ML Kerosene for Rs 2

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 8:05 PM IST

kerosene in sivaganga ration shop: சிவகங்கை அருகே நியாய விலைக்கடையில் 50 மில்லி மண்ணெண்ணெய் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொல்லங்குடி நியாய விலைக்கடை
கொல்லங்குடி நியாய விலைக்கடை (Photo credits - ETV Bharat Tamil Nadu)

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் தலா 3 லிட்டர் அளவில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த நியாய விலைக் கடைகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைந்துள்ளதால், அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது, 950 அட்டைதாரர்கள் கொண்ட கொல்லங்குடி நியாய விலைக் கடைக்கு, வெறும் 38 லிட்டர் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அனைத்து அட்டைதாரர்களுக்கும் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்த நியாய விலைக் கடை பணியாளர், ஒவ்வொரு அட்டைதாரருக்கும் 50 மில்லி அளவு மண்ணெண்ணெய் இரண்டு ரூபாய்க்கு விநியோகம் செய்துள்ளார்.

இதனால் மக்கள் நியாய விலைக்கடை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.

இதையும் படிங்க:ஒரு கிராமத்தின் கடைசி கதை... நிறைவேறாத ஆசையோடு காற்றில் கலந்த கிராமத்தின் கடைசி மனிதர்!

ABOUT THE AUTHOR

...view details