தமிழ்நாடு

tamil nadu

அருப்புக்கோட்டை அருகே புளியமரம் மீது கார் மோதி விபத்து; 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! - Aruppukottai car accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 6:59 AM IST

Aruppukottai Accident: அருப்புக்கோட்டை அருகே புளிய மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

Car
கார் விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம், கீழ முடிமன்னார் கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). இவர் புளிச்சகுளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும், இவர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக்குழுவும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.‌

இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால், ஆசிரியர் பாலமுருகன் தனது கலைக்குழு நண்பர்களான சவ்வாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மணி (18), ஆலடிபட்டியைச் சேர்ந்த சின்னத்துரை (22) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் உள்ளிட்ட நான்கு பேர் காரில் சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, காரை ஆசிரியர் பாலமுருகன் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.‌

இந்த நிலையில், அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியின் சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஆசிரியர் பாலமுருகன் உள்ளிட்ட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.‌ பின்னர், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ம.ரெட்டியபட்டி காவல் நிலைய போலீசார், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த, விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களைக் கைப்பற்றினர்.

தொட்ரந்து, உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ம.ரெட்டியப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாத யாத்திரையின்போது பரிதாபம்.. லாரி மோதி மூன்று பேர் பலி..! தென்காசி அருகே சோகம்!

ABOUT THE AUTHOR

...view details