சென்னை:தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டிணம், கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு இன்று (அக்.3) முதல் அக்.16ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் பொதுமக்கள் பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்.13 முதல் அக்.16 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துத்துக் கழகத்தில் இணையம் வழி சேவையான www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.