தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்கள் மீது தாக்குதல்.. தப்பிச் சென்றவருக்கு போலீசார் வலைவீச்சு! - man escape without paying toll gate - MAN ESCAPE WITHOUT PAYING TOLL GATE

Perambalur Toll Gate: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் சுங்கச்சாவடி புகைப்படம்
பெரம்பலூர் சுங்கச்சாவடி புகைப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 10:45 PM IST

சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களை தாக்கும் வீடியோ (credits -ETV Bharat Tamil Nadu)

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறை பகுதியில் டிடிபிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிக்கு சென்னையிலிருந்து - திருச்சி நோக்கி திமுக கொடி கட்டி வந்த சொகுசு கார் ஒன்று வந்தது. அப்போது Fast Tag மூலம் கட்டணம் செலுத்த முயன்ற போது அது காலாவதியானது தெரிய வந்தது.

பின்னர், ரொக்கமாகச் சுங்க கட்டணத்தைச் செலுத்துமாறு ஊழியர்கள் கார் ஓட்டுநரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் பணம் கட்ட முடியாது, நான் திமுக கவுன்சிலர் என்னிடமே பணம் கேட்கிறீர்களா என்று கூறி திட்டியவாறே காரினை வேகமாக எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அங்குள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு கார் செல்லும் போது சுங்கச்சாவடி ஊழியர்கள் அதனைத் தடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர், காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து, சுங்கச்சாவடி ஊழியர்களைத் தாக்கியுள்ளார். இவருடன், காரில் இருந்த சிலரும் கீழே இறங்கி வந்து சுங்கச்சாவடி ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.

இதில், சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் மணிகண்டன், சுங்க கட்டணம் வசூலிப்பாளர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த காரில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதால், அதை ஓட்டி வந்தவர் யார், கார் யாருக்கு சொந்தமானது அவர்களது விலாசம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருச்சியில் விரைவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு:எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உறுதி! - MLA Inigo Irudayaraj Petition

ABOUT THE AUTHOR

...view details