சிவகங்கை: காரைக்குடி அருகே வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைகளுக்கு பதிலாக, கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில், மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியில் அடைமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்ததில் அவை தங்க நகைதானா? என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, நகைகளை முறைப்படி பரிசோதனை செய்ததில், அவை அனைத்தும் கவரிங் எனத் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அடைமானம் வைத்த தங்க நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வங்கி மேலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதும், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 533 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:'ரேர் பீஸ் சேட்டா'.. இல்லாத இரிடியதுக்கு 2 கோடி.. கேரளா தொழிலதிபருக்கு கோவையில் அடிச்ச ஷாக்!