விழுப்புரம்:விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுதினம் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 13ஆம் தேதி நடைபெற்று, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் சி அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா மற்றும் சுயேட்சையாக 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பரபரப்பாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வந்த நிலையில், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கெடார் பேருந்து நிலையம் அருகே இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தில் பாமக தொண்டர்கள் சமூக நீதி துரோகி திமுக, போதைப் பொருள் திமுக, மனித பட்டி திமுக, டோக்கன் திமுக, கள்ளச்சாரய திமுக, ஜனநாயக படுகொலை திமுக,பட்டபகலில் படுகொலை திமுக போன்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு கெடார் பேருந்து நிலையத்திலிருந்து, சிறுது தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
அதில் பேசிய அன்புமணி, “இந்த தேர்தல் பாமகவிற்கும், விக்கரவாண்டி தொகுதிக்கும் மிக முக்கியமானது, ஏன்னென்றால் திமுகவிற்கு இது பத்தோடு பதினொன்றாவது தேர்தல். ஆனால் உங்களுக்கு, இது பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்புகள் போன்ற முக்கிய தேவைக்களை தரபோகும் தேர்தல்.