தமிழ்நாடு

tamil nadu

ஆடி அமாவாசை; தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு! - Aadi Amavasai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 9:48 AM IST

Updated : Aug 4, 2024, 9:58 AM IST

Aadi Amavasai: ஆடி அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் குடும்பங்களில் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்திய மக்கள்
தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்திய மக்கள் (CRedits - ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாடு:ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அமாவாசை நாள் இந்துக்களின் முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் நீர்நிலைகளில் நீராடி தங்கள் குடும்பங்களில் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொள்வர். அந்த வகையில், ஆடி அமாவாசையான இன்று (ஆக.4) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி (CRedits - ETV Bharat Tamil Nadu)

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி அதிகாலை முதலே வழிபாடு செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் வந்து, எள், அரிசி மாவு உள்ளிட்டவற்றைக் கொண்டு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதையொட்டி, அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாபநாசம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் (CRedits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை:அதேபோல், புகழ்பெற்ற மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை செய்து, தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர். காவிரி நீர் திருப்பி விடப்படாததால், மயிலாடுதுறை காவிரியில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் செயற்கை முறையில் போர்வெல் மூலம் புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பக்தர்கள் புனித நீராடும் வகையில் பிரத்யேகமாக குழாய் மூலம் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் வழக்கத்தை விட குறைந்த அளவே பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் காணப்படுகிறது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் (CRedits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதலே மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் என 2,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 60க்கும் மேற்பட்டோர் ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் விதைக்கும் விவசாயி (CRedits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை:ஆடி 18 ஆன நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மங்கலம், அணுகுமலை, ஓலைப்பாடி, நாரையூர், வேடந்தவாடி, பூதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவு நெல் விதை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் விதைப்புக்கு முன்பு பச்சரிசி, கல்லை, வெல்லும் உள்ளிட்டவைகள் கலந்து படையல் இட்டு சிறப்பு பூஜைகளுடன் நெல் விதை விதைக்கும் பணியில் மும்முரமாக வருகின்றனர்.

join ETV Bharat WhatApp Channel click here (CRedits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆடி அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்! - Rameswaram Aadi Amavasai

Last Updated : Aug 4, 2024, 9:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details