தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் டூ தூத்துக்குடி டிக்கெட் 180 ரூபாயா? நடத்துநர் - பயணி இடையே கடும் வாக்குவாதம்.. வைரலாகும் வீடியோ! - TIRUCHENDUR BUS TICKET FIGHT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 4:56 PM IST

TIRUCHENDUR TO THOOTHUKUDI BUS TICKET FIGHT: திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்ல உள்ளூர் பேருந்தில் செல்லுங்கள், இல்லையென்றால் மதுரை டிக்கெட் விலைக்கு தான் தூத்துக்குடியில் இறக்கிவிட முடியும் எனக் கூறிய நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசு பேருந்து நடத்துனர்
அரசு பேருந்து நடத்துனர் (Credits- ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி:தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர், ரயில்வேத் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் இன்று (ஆகஸ்ட் 2) காலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனத்தை முடித்து விட்டு காலை 11 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்து நடத்துனர், பயணி வாக்குவாதம் (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளுக்கும் 40 ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேருந்தில் ஏறிய மணிகண்டன் தூத்துக்குடி ஸ்பிக் பகுதியில் இறங்க வேண்டும் என்று நடத்துநரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

ஆனால், நடத்துநரோ இந்த பேருந்து அங்கெல்லாம் நிற்காது. நீங்கள் வேண்டும் என்றால் மதுரைக்கு 180 ரூபாய் டிக்கெட் எடுத்து தூத்துக்குடியில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, மணிகண்டனுக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியில் பயணியைப் பார்த்து நடத்துநர், “வீணாக நீங்கள் தான் வாக்குவாதம் செய்கிறீர்கள். தூத்துக்குடி செல்ல வேண்டும் என்றால், நீங்கள் லோக்கல் பேருந்தில் ஏறி இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு திருச்சி பேருந்தில் ஏறினால், பின் மதுரைக்கு எடுக்கும் டிக்கெட் விலையில்தான் பயணிக்க வேண்டும் என்றுள்ளார். அப்போது அந்த பயணி, நான் ஸ்பிக் டிக்கெட் கேட்டேன். அதற்கு நீங்கள் நிற்காது, எனக்கு தெரியாது என்று கூறினால் எப்படி? என்றார். இவர்கள் இருவரும் பேசும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சென்னை ஏர்போர்ட்டில் கேட்பாரற்று கிடந்த பை.. திடீரென வந்த நபர்.. அடுத்து நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details