கிருஷ்ணகிரி:நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் (Krishnagiri Lok Sabha Constituency) வீரப்பன் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சி (Naam Tamilar) சார்பாக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் கோபிநாத், அதிமுக வேட்பாளராக ஜெயபிரகாஷ், பாஜக வேட்பாளராக நரசிம்மன் போட்டியிடுகின்றனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்:
Gopinath K | கோபிநாத் கே | INC | காங். | CONGRESS | காங்கிரஸ் |
Jayaprakash V | ஜெயப்பிரகாஷ் வி | AIADMK | அஇஅதிமுக | All India Anna Dravida Munnetra Kazhagam | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் |
Narasimhan C | நரசிம்மன் சி | BJP | பா.ஜ.க. | Bharatiya Janata Party | பாரதிய ஜனதா கட்சி |
Vidhya Rani Veerappan | வித்யா ராணி வீரப்பன் | NTK | நா.த.க. | Naam Tamilar Katchi | நாம் தமிழர் கட்சி |
"கர்நாடகாவில் முன்னாள் அமைச்சரான ராஜ கவுடா தேர்தலில் வெல்வதற்கு நானும் காரணம். எனக்கு தெரிந்த மக்களிடம் ராஜ கவுடாவுக்கு ஓட்டு போடுமாறு கூறினேன்". இது 1999ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வீரப்பன் பேசிய வார்த்தைகள். பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு காட்டில் தலைமறைவாக இருந்தாலும், வீரப்பனுக்கு அரசியலில் தீராத ஆசை இருந்தது.
உத்தரபிரதேசத்தில் பூலான் தேவிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர் அரசியலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டும் வீரப்பன். இதனையே முன்மாதிரியாகக் கொண்டு தனக்கும் மன்னிப்பு கிடைக்கும் என காத்திருந்தார். காட்டிலிருந்து வெளியான வீடியோ, ஆடியோ கேசட்டுகள் வீரப்பனின் அரசியல் ஆசையை வெளியுலகிற்கு தெரியப்படுத்தின. ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல் 2004ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவருக்கும் அறிந்ததே.
வீரப்பனின் ஆசை நிறைவேறாது போனாலும் இன்று அவரது மகள் அரசியலில் களம் கண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார், வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி வீரப்பன். தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள இந்த தொகுதிக்குட்பட்ட ஒசூரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த வித்யாராணி வீரப்பன் ஈடிவி பாரத்துக்காக பேட்டி அளித்தார். இனி அவர் அளித்த பேட்டியைக் காணலாம்.
கேள்வி: தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் உங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? வரவேற்பு எப்படி இருக்கிறது?
பதில்: பிரச்சாரத்திற்கு செல்லும் போது, மக்கள் அனைவரும் என்னை அவர்களது சொந்த பொண்ணாகத் தான் பார்க்கிறார்கள். அப்பா (Veerappan) இல்லயென்ற ஆதங்கம், பாசத்தை என் மீது வெளிப்படுத்துகிறார்கள். தேர்தல் கள நிலவரம் மிகவும் ஆதரவாக உள்ளது. அரசியலைத் தாண்டி என்னை எமோஷனலாக ஒரு மகளாகத் தான் பார்க்கிறார்கள்.
கேள்வி: உங்களின் அரசியல் நிலைப்பாட்டில் அம்மா, சகோதரியின் ஆதரவு உண்டா?
பதில்:கண்டிப்பாக அவர்கள் எனக்கு ஆதரவுதான். ஏனென்றால், அவர்களும் தமிழ் தேசியம் என்ற கொள்கையின் கீழ் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: சமீபத்தில் வீரப்பனின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது. இன்றைய தலைமுறை வீரப்பன் அறிந்திராத சில பக்கங்கள் குறித்து வெளிப்படுத்தியது. அது பற்றிய உங்களின் கருத்து என்ன?